மனித நேய பணியில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு விருது !

2
யோகாஆசிரியர்பெ.விஜயகுமார்
யோகாஆசிரியர்
பெ.விஜயகுமார்

அனாதை பிணங்கள் நல்லடக்கம் செய்து மனித நேய பணியில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு விருது!இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை சேர்மன் ராஜசேகரன் செயலாளர் ஜவகர் ஹசன், துணைச் சேர்மேன் சவுமா ராஜரத்தினம், பொருளாளர் ஆர். இளங்கோவன், இணை செயலாளர் மோகன் மற்றும் மனோகர்ராஜ், மேலாண்மை குழு உறுப்பினர்கள் சிவராமலிங்கம், குமரன் சேதுபதி, குணசேகரன், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சேவை கோவிந்தராஜ், மருத்துவர் ராமகிருஷ்ணன், மருத்துவர் செந்தில்குமார், எட்மண்ட் வில்லியம், முரளிதரன், செயலாற்று குழு உறுப்பினர்கள் ஜெயராமன், மார்கரேட் ஜூலியா, வில்பர்ட் எடிசன், ஷீலா செலஸ், முகமது இப்ராஹிம், மகேந்திரன், தீனதயாளன், தினேஷ், சௌந்தர்ராஜன் முன்னிலையில் அனாதை பிணங்கள் நல்லடக்கம் செய்து மனித நேய பணியில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு விருது வழங்கினார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

அனாதை பிணங்கள் நல்லடக்கம் செய்து வருவது குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், மரணமானது துயரத்தின் உச்சம் ஆகும். இறந்தவரின் உடலை அவரின் சொந்த இருப்பிடத்துக்கோ, வீட்டுக்கோ, நெருக்கமானவர்களிருக்கும் ஊருக்கோ உறவினர்க்கோ தகவல் கொடுக்க முடியாமல் அமரர் அறையில் உரிமை கோரப்படாத உடல்கள் ஏராளம் உள்ளன. இப்படி உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகின்றோம். மரணம் ஒன்று தான். சம்பவங்கள் பல. இதன் வலியும் வேதனையும் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

சாலை, ரயில் விபத்தில் பலியாகி மூட்டையாய் வந்ததும் உண்டு. ஆற்று மதகில் ஊறிய நிலையில் கிடந்த உடலும் உண்டு. பிச்சை எடுத்து ஜீவனம் நடத்திய இருபாலரும் பேருந்து நிறுத்தத்திலோ, சாலை ஓரத்திலோ இறந்தவர்களும் உண்டு. உயிருக்கு போராடுபவரைஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு சென்ற சொந்தங்களும் உண்டு. புராண, இதிகாச காலம்தொட்டு மயானங்களில் இந்து மதத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை இன்றளவும் தொடர்ந்து வருகிறது. ஒரு வீட்டில் இறப்பு ஏற்பட்டால் சுடுகாட்டில் அல்லது உடலை புதைக்கும் இடுகாட்டில் ஆண்கள் தான் இறுதி காரியங்களை செய்து வருவார்கள். பெண்கள் வீட்டில் காரியங்களை செய்வதோடு சரி. சுடுகாட்டில், மயானத்தில் காரியங்கள் செய்வதற்கு பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. உயிருக்கு உயிராக நேசித்த கணவர் அல்லது பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்களின் உடலுக்குக்கூட அந்த இடத்தில் இறுதியாக முகத்தை கூட பார்க்க அனுமதிக்கப்படாத இந்த உலகில் மயான‌பூமியில் மனைவி மகளுடன் ஆதரவற்ற அனாதை பிரேதங்களை அடக்கம் செய்து வருகிறோம். மனைவி சித்ரா வழக்கறிஞர் பணியினை செய்து வருகிறார். மகள் கீர்த்தனா வழக்கறிஞர் பட்டப்படிப்பினை படித்து வருகிறார்.
உலகம் எவ்வளவோ முன்னேறினாலும் வறுமை மாறாமல் தொடா்கிறது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கொடிது கொடிது வறுமை கொடிது
வறுமையின் விளைவை களப் பணியால் அறிந்து அதற்குண்டான அணுகு முறை கொள்கையுடன் தினசரி உணவகங்களில் உபரியாகும் உணவினை பெற்று வறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் பசிப்பிணியை போக்கும் வகையில் ஆண்டு தோறும் உணவளித்து வருகிறோம்.
வறுமையை உணா்வுப்பூா்வமாக கள ஆய்வில் கண்டு ‘ஏழ்மையான பொருளாதாரத்தாலோ முதுமை மற்றும் நோயின் அடிப்படையில் காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு சாலையோரங்களிலேயே உண்டு உறங்கி கையேந்தி பிச்சை எடுத்து ஜீவனம் நடத்தி மருத்துவ சிகிச்சை இன்றி உடல் நலம் குன்றி குற்றுயிராக உருக்குலைந்து அழுக்கு படிந்த உடல், ஏக்கம் நிறைந்த கண்கள், கறை படிந்த பற்கள், கிழிந்த உடையுடன் சாலை ஓரங்களிலேயே இறந்து போய் விடுகிறார்கள்.

இவர்கள் போதிய பண வசதி இல்லாமல் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர். உற்றார் உறவினர் சகோதர சகோதரிகள் உதாசீனத்தால் உறவின்றி பொது மக்களிடம் கையேந்தி வாழ்க்கையினை நடத்துகின்றனர்.பல ஏளனத்திற்கு ஆளானவர்கள் படும் கோபம், வேதனை, துக்கம், துயரத்தால் இவர்கள் நிம்மதியாக தூங்கவோ, வேலை செய்யவோ அல்லது சாப்பிடவோ முடிவதில்லை. இவர்களது வேதனைக்கு முக்கியக் காரணியாய் அமைவது உடல்நலக் குறைவும் முதுமையும் தான். மிகவும் ஏழ்மையான வா்க்கத்தைச் சோ்ந்தவர்கள். சாப்பிடுவதை குறைத்தும், ஒரு வேளை சாப்பிடுவதை முற்றிலும் தவிா்த்தும் உள்ளனா்.

இதனால் இவா்களின் மகிழ்ச்சியும் காற்றோடு கலந்து விடுகிறது. ஏன் அடிப்படை உரிமைகளான வீட்டை இழந்து குடும்பத்தை மறந்து தங்களின் சமூகப் பிணைப்பில் இருந்து விலகி ஒரு நிலையற்ற வாழ்வை வாழ்கின்றனா். இப்படி வறுமையில் வாழும் அவா்களின் துன்பங்களும் துயரங்களும் குறித்து சொல்லப்படாதவை ஏராளம். எப்படி இருப்பினும் இன்னும் வறுமை தீா்ந்தபாடில்லை. தொடர்கிறது. ஆதரவற்று அனாதையாக இறந்தவர்களுக்கு மரியாதை செய்ய ஆளில்லை மலர்மாலை அணிவிக்க யாருமில்லை இறுதி ஊர்வலத்திற்கு யாருமில்லை. பிரேதத்திற்கு வாய்க்கு அரிசி போட ஆளில்லை.

இந்நிலையில் சுயநலம் பார்க்காமல் பொதுநலன் சார்ந்து இறுதி சடங்கினை செய்கின்றோம். கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது பல உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம்.மேலும் தனிப்பட்ட முறையில் 25 முறை குருதிக்கொடை வழங்கியும், 3 ஜோடி கண்களை கண்வங்கிக்கு பெற்றுகொடுத்தும், 50க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டும், வாழ்நாளிற்கு பிறகு படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போம் என எனது உடலினை தானமாக வழங்க உறுதியேற்று மனைவி மகள் ஒப்புதலுடன் திருச்சி கி. ஆ. பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்துள்ளேன். மனைவி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் மகள் கீர்த்தனா விஜயகுமார் இருவரும் விடுமுறை நாட்களில் இயன்ற அளவு உரிமை கோரப்படாத உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள் என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

2 Comments
  1. முனைவர்.ச.பாலமுருகன் says

    வணக்கம். வாழ்த்துக்கள் சார்.
    நாளை காலை உங்களை நான் சந்திக்க வரலாமா?
    ISBN எப்படி பெறுவது என்பது பற்றி உங்களிடம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
    மிக்க நன்றி.

  2. முனைவர். ச.பாலமுருகன் says

    வணக்கம். வாழ்த்துக்கள் சார். உங்களை நாளைக் காலை நேரில் சந்தித்து ISBN பதிவு எப்படி பெறுவது என்பதை பற்றி தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். வரலாமா? உங்கள் தொலைபேசி எண் வேண்டும்.
    என்னுடைய வாட்ஸ்அப் எண் 9842013290.

Leave A Reply

Your email address will not be published.