நடிகை சௌகார் ஜானகி திரைப்பயணம்….
1950ம் ஆண்டு என்.டி.ராமாராவ் நடித்த தெலுங்கு திரைப்படமான ‘சவுகாரு’ மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானதால், ‘சௌகார் ஜானகி’ என அழைக்கப்பட்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இரு கோடுகள், உயர்ந்த மனிதன், பாமா விஜயம், எதிர்நீச்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்னதாக சுமார் 300-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார் சௌகார் ஜானகி.
கடந்த 2020-ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ படம்தான் சௌகார் ஜானகி நடித்த கடைசி (400-ஆவது) திரைப்படம்.
ஆந்திராவின் மறைந்த முதலமைச்சர் என்.டி.ராமாராவ், மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர்கள் MGR, கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய 4 முதலமைச்சர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் சௌகார் ஜானகி.
நாடகம் மற்றும் சினிமாவில் அவரது கலைச் சேவையை பாராட்டி இந்திய அரசு கடந்த 2022-இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.