தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை எதிர்க்கவும், தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தும் நம்மை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்க நினைக்கும் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம்.

தலைமை கழக அறிவுறுத்தலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் தெற்கு மாவட்ட கழக செயலாளர்  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி,  பால்பண்ணை பேருந்து நிலையம் தஞ்சாவூர் ரோட்டில்  கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இனிய ரமலான் வாழ்த்துகள்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் வரவேற்புரை ஆற்றினார். தலைமைக் கழக பேச்சாளர் கவிச்சுடர் கவிதை பித்தன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன் சபியுல்லா மாநில அணி நிர்வாகி செந்தில் பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார்  மற்றும் மாவட்ட , மாநகர, பகுதி,  ஒன்றிய,  நகர,பேரூர் , கழக செயலாளர்கள் நிர்வாகிகள், தலைமை செயற்குழு,  KKK கார்த்திக் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், வட்ட,  கிளைகழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , அனைத்து அணியை சேர்ந்த நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், செயல்வீரர்கள் கழகத் தொண்டர்கள்   கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத் தர மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமைக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், இதுதான் ஒரே இலக்கு என்ற உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.