அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆசிரியர்களை சிறுமைபடுத்தவா, தகுதித்தேர்வு?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ரசு அதிகாரிகளும் ஊடகங்களும் கவனத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும்!

தகுதித் தேர்வு எழுதச் செல்லும் ஆசிரியர்கள் தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்கு வருகைப் புரிவது உள்ளிட்ட தேர்வு விதிகளை மிகவும் கவனத்துடன் பின்பற்ற வேண்டும்!

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள் நாள் 04.06.2026 ஆசிரியர் தகுதித் தேர்வுத் தாள் ஒன்று (TET: Paper 1) இன்று (04.06.2026) நடந்துள்ளது. ஊடகங்களில் ஒளிபரப்பான ஒரு காணொளியை ஒருவர் பகிர்ந்தார்.

காணொளியில் ஒரு தேர்வு மையத்தில் தகுதித் தேர்வு எழுத வந்த ஒருவர், தேர்வு மையத்தின் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு அதிகாரியிடம், தான் ஒரு நிமிடம் மட்டுமே தாமதமாக வந்ததாகவும், தன்னை அனுமதிக்குமாறும் கெஞ்சுகிறார். அந்த அதிகாரி விதிகளை படித்துப் பாருங்கள் என்று கூறி வாகனத்தில் ஏறுகிறார், அவரின் முகம் கடமையை நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.  ஒரு அவலக் குரல் ஒலித்துக் கொண்டு இருக்கும் போது முகத்தில் மகிழ்ச்சி வெளிப்படுமா? என்ற கேள்வி எழுகிறது.

யாவரும் கேளீர்

தமிழக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026: விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்!நடந்து முடிந்த, மறுமுறைநீட்  நடைமுறையில் இதே போல, மாணவர்கள், அவர்கள் பெற்றோர் வாயில் கதவுகளின் முன் தரையில் புரண்டு, ஒரு நிமிடம் தாமதமாக வந்ததற்காகஅனுமதி மறுப்பது நியாயமில்லை என்று கெஞ்சினர், கதறினர். அடுத்தநாள் ஒன்றிய அமைச்சர் தெளிவாக பேசினார். ஒரு நிமிடம் என்றாலும் தாமதம் தாமதம் தான் உள்ளே அனுமதிக்க இயலாது. நடந்தது சட்டப்படி சரியானதே என்றார்.

தேர்வை நடத்துபவர்கள் கேள்வித்தாள் தாமதமாக தந்தால் மறுத்தேர்வு நடத்துவார்கள்.‌ குற்றம் செய்தது தேர்வு முகமை, தண்டனை தேர்வர்களுக்கு. சந்தையின் பார்வையில்,  மனிதர்களாக இருந்தாலும், தேர்வர்கள் என்றால் நுகர்வோர்தான். எந்தவிதமான மனிதாபிமானத்தையும் வணிகச் செயல்பாடுகளில் எதிர்பார்க்க இயலாது‌.

இன்று, கல்வி வணிகப் பொருள். வணிகச் சந்தையின் பிடிக்குள் கல்வி.

நம் கண் முன்னே நமது மாணவர்கள் பட்ட துன்பத்தை பார்த்த ஆசிரியர் பெருமக்கள், இன்னும் சற்று எச்சரிக்கை உணர்வுடன் தங்களுக்கு நடத்தப்படும் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும்‌‌. யாரிடமும் யாரும் எந்த கருணையும் எதிர்பார்க்க இயலாது, அது சாத்தியம் இல்லை என்பதை உணர வேண்டும்.

ஆசிரியர்களின் கெஞ்சலும் கதறலும் காணொளியாக பதிவாகி ஊடகத்தில் உலா வருவது, ஆசிரியர் தொழிலை சிறுமைப்படுத்தவே உதவும். ஊடகங்கள் அத்தகைய காணொளிகளை பதிவேற்றம் செய்வதை தடை செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் அகற்றப்பட வேண்டும். பொறுப்புள்ள ஊடகம் அதை செய்யும் என்று நம்புகிறோம்.

அதிகாரிகள் இத்தகையச் சூழலை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். தனது செயல் ஒட்டுமொத்த பள்ளிக் கல்வித் துறை செயல்பாட்டையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய கேலியும், சிரிப்பும் இத்துடன் நிற்கப் போவதில்லை. தேர்வு முடிவுகள் வந்தவுடன், முடிவுகள் அடிப்படையில் நடக்கப்போகும் விவாதம் இன்னும் கொடூரமாக இருக்கப்போகிறது. ஆசிரியர்கள் மனதை புண்படுத்தி ரசிக்கும் மனநோயாளிகளாக பலர் காட்சித் தருவார்கள்.

2012 ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் அன்றைய ஊடகங்கள் எந்தளவு விவரம் தெரியாமல், பொறுப்பற்ற முறையில் விவாதம் என்ற பெயரில் மக்களின் மனங்களில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை பார்த்தோம். அதே காட்சிகள் மீண்டும் அரங்கேற வாய்ப்புகள் உருவாகிவிடக்கூடாது.

2002ம் ஆண்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 86வது சட்டத் திருத்தத்தில் குழந்தைகளின் உரிமை என்பதாக கூறு 21Aயில் எதை தெரிவித்தனரோ, அதை அப்படியே கூறு 51A(k) மூலம் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடமை ஆக்கினார்கள். இந்த சூழ்ச்சி குறித்து இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை.

குழந்தைகளுக்கு கல்வி உரிமை வழங்கப்பட்டதா? அல்லது  கல்வியை  மறுக்கும் உரிமை அரசிற்கு வழங்கப்பட்டதா?  என்று எந்த ஊடகமும் இன்று வரை விவாதிக்க முன் வரவில்லை.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

அரசமைப்புச் சட்டத்தின் கூறு 21A நடைமுறைப் படுத்த 2009ல் இயற்றப்பட்ட சட்டம், தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறது.

கல்வியியலில் பட்டயமோ /  பட்டமோ ஆசிரியருக்கான தகுதி. அதை பெறாமல் ஆசிரியர்பணி செய்பவர்கள் இருந்தனர், அவர்களை தகுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும.

அதற்கு மாறாக, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும், அதை எழுத கல்வியியல் பட்டயமோ / பட்டமோ பெற்றிருக்க வேண்டும் என்பதாக விதி முறைகளை உருவாக்கி கொண்டனர்.

அறிவிற்கு பொருந்தாத இந்த விதிமுறையை பொதுப் பள்ளிகளை நடத்தும் மாநில அரசுகள் எதிர்க்கவில்லை.

மாறாக, ஆசிரியர்களை பழி தீர்க்க இதை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டனர்.‌

பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு
பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு

அதன் தொடர்ச்சிதான் அரசுப் பணியில் இருக்கும் கல்வியியல் தகுதிப் பெற்ற ஆசிரியர் கூட, மனப்பாட கல்விமுறை அடிப்படையிலான தேர்வு முறையில், தனது நினைவாற்றலை வெளிப்படுத்தும் ஒரு தேர்வை, ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற பெயரில் எழுத வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கிக் கொண்டனர்.

இத்தகைய நெருக்கடிகளை ஆசிரியர்களுக்கு தருவதன் மூலம் கல்வித் தரம் மேம்படாது என்ற எந்த புரிதலும் இல்லாமல் நீதிமன்றங்களைக் காரணம் காட்டி அரசுகள் இத்தகையத் தேர்வுகளை நடத்துகின்றன என்பதை உணர்ந்து, ஆசிரியர் பெருமக்கள் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

கண்ணியத்துடனும், மன வலிமையுடனும் இத்தகைய சூழலை  ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

பல நெருக்கடிகளை எதிர் கொண்டு வெற்றி பெற்றுவரும் ஆசிரியர் பெருமக்கள் இத்தகைய நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள்.

அச்சமின்றி, கவலையின்றி, நம்பிக்கையுடன் தங்களின் பணிகளை ஆசிரியர்கள் ஆற்றிடுவார்கள் எனும் பெரும் நம்பிக்கை மக்களிடம் உண்டு. மாணவர்களும், பெற்றோரும் ஆசிரியர்களுக்கு  உற்ற துணையாக இருப்பார்கள்.

ஆசிரியர்களை சிறுமைப்படுத்திட, எந்த வகையிலும் வாய்ப்பு தந்து விடாமல் அரசும் ஊடகமும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

பொதுச் செயலாளர்,

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.