திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு – நங்கை நலன் அறக்கட்டளை நிறுவுனர் வலியுறுத்தல் !
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயிலில் கடந்த 27, 28, 29 தேதிகளில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில் பல இடங்களிலிருந்து திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நங்கை நலன் அறக்கட்டளை நிறுவுனர் திருநங்கை அபர்ணா அவர்கள் கூறியதாவது; திருவிழாவில் முதல் முறையாக கலந்து கொள்வதாகவும், ஏற்பாடுகள் நன்றாக இருப்பதாகவும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் நிழல் கூடல் அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றார்.

இம்முறை யார் ஆட்சி அமைத்தாலும் கல்வியிலும் , வாழ்வாதாரத்திலும் திருநங்கைகள் உயர்வதற்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையிட்டார் . “ஜெயலலிதா அவர்கள் ஆட்சியிலும் கேட்டிருந்தோம் , திருநங்கை பெயர் வைத்த கலைஞர் ஆட்சியிலும் கேட்டிருந்தோம் வழங்கப்படவில்லை” , இம்முறையாவது சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நங்கை நலன் அறக்கட்டளை மூலம் தற்போது 15 நங்கை மாணவர்கள் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
மு.வசீர் அகமத்
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை
சென்னைப் பல்கலைக்கழகம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.