பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு செய்த திருச்சி ஆசிரியை கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  திருச்சி ஆசிரியை  போக்சோவின் கைது !

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் தேவி ( 40 )  இவர் துறையூர் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். துறையூர் பகுதியில் ஒரு வீடு எடுத்து வசித்து வருகிறார்.

Kauvery Cancer Institute App

கருத்து வேறுபாடு காரணமாக அவரும் அவரது கணவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார். இந்த நிலையில்  அவரிடம் 10 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவரின் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த பெற்றோர், தனது மகனின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

அப்போது அந்த மாணவர் ஆசிரியர் உடன் பேசியதில் இருந்து, படிப்பில் கவனம் இல்லாததும் அந்த மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பு சார்பில் ஆசிரியை மீது முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.அதன் பெயரில்  முசிறி மகளிர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி ஆசிரியையை தேவியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அந்தப் அந்த மாணவர் குழந்தைகள் நல காப்பதிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் இந்த சம்பவம் அந்தப் பகுதியிலே பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

முந்தைய செய்திகள்..  படிக்க….

திருச்..சீ…சீ… மாநகரில் இடுகாட்டின் இழிநிலை ! அதிகார திமிர் !

https://angusam.com/the-infamy-of-idugat/

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.