இரு மரணங்கள் — இரு நிலைப்பாடுகள் !
இந்த இரண்டையும் பார்க்கும்போது இந்த சமுகத்தின் கோரமுகத்தை உங்களால் பார்க்க முடியும். திரைக்கலையை ரசித்து அங்கேயே வாழ்ந்து திரைப்படங்கள் பல நடித்து தனிமையில் யாருமற்று நோயுற்று வாழ்ந்த திரைக்கலைஞனது இறப்பிற்கு எந்த திரைத்துறை சங்கங்களும் அஞ்சலி செலுத்த வரவில்லை. அநாதை பிணத்தை அடக்கம் செய்பவர்களால் அவரது உடல் இரண்டுநாள் கேட்பாரற்று கிடத்தப்பட்டு இப்போது இறுதி நிகழ்வு செய்யப்படுதாம்.
ஆனால் அஜித்குமார் என்னும் பிரபல நடிகரின் தாயார் இறக்கிறார். அந்த இறப்பு என் குடும்பத்தின் தனிப்பட்ட துக்க நிகழ்வு இதற்கு யாரும் வரவேண்டாம் என அவர் நியாயமான தன் விருப்பத்தை பகிர்கிறார். ஆனாலும் இந்த சினாமா கும்பல்கள் ஓடோடி சென்று வருகிறது. இதிலிருந்து நீங்கள் ஒன்றை அறியலாம்.
பணம் இல்லாதவன் அவன் எவ்வளவு பெரிய ஜாம்பவனாக இருந்தாலும் பிணத்தைக் கூட அவனை இந்த சமுகம் கடைசியாக பிணமான பின்பும் கூட மதிப்பதில்லை. அதற்கு இந்த மானங்கெட்ட சினிமாத்துறையும் நடிகர் சங்கங்களும் சிறந்த உதாரணமாக இதற்கு சொல்லலாம்.
அந்த ஏழை திரைக்கலைஞருக்கு எம் இறுதி அகவணக்கங்கள்.
— சவீதா முனுசாமி







Comments are closed, but trackbacks and pingbacks are open.