தேனி – உப்பாரப்பட்டியில் தீண்டாமை தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!
தேனி மாவட்டம் உப்பாரப்பட்டி ஊராட்சியில் தீண்டாமை தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உப்பாரப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கக் கூடிய பகுதியில் புதிதாக வீட்டடி மனைக்கு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்திற்கு உப்பர்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு பாதை கொடுத்தால் மட்டுமே வீட்டடி மனைக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து கடந்த 4.1.2025 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் புகார் தெரிவித்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த நிலையில் உப்பார்ப்பட்டி ஊராட்சியில் பதவிக்காலம் முடிந்து விட்டது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது உப்பார்பட்டி ஊராட்சியில் தீண்டாமை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இடத்திற்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் தயாராகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிய வருகின்றனர்.
— ஜெய்ஸ்ரீராம்.