இளம் தொழில் முறை வல்லுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
திருச்சிராப்பள்ளி மாவட்ட அளவில் சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகில் (District Level Monitoring Unit) இளம் தொழில்முறை வல்லுநர்(Young Professional) பணிக்கு ஒரே ஒரு காலிபணியிடத்திற்கு வெளி முகமையிலிருந்து (Out Sourcing) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இப்பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் கணினி அறிவியல் /தகவல் தொழில் நுட்பத்தில் இளங்கலைபொறியியல் பட்டப்படிப்பு (அல்லது) தரவுஅறிவியல் மற்றும் புள்ளியியலில் நான்காண்டு பட்டப்படிப்பு (அல்லது) கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், தரவுஅறிவியல், புள்ளியியல் அல்லது தொடர்பான படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் தொகுப்பூதியமாக ரூ.50,000/- மட்டும் வழங்கப்படும். எனவே தகுதியுள்ள வெளிமுகமையிலிருந்து (Out Sourcing) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: புள்ளிஇயல் துணை இயக்குநர், மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகம், திருச்சிராப்பள்ளி – 620 001. விண்ணப்பிக்க கடைசிநாள்:19.02.2025.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.