அடிக்கடி அந்த வந்தே மாதரத்தை கேட்கச் சகிக்கவில்லை!
விசிகவை யாரும் தவெகவுடன் செல்வதை தடுக்கவில்லை. அதிகாரத்தில் இணைவதையோ, ஆட்சியில் ஐக்கியமாவதையோ எதிர்க்கவில்லை. அது நீண்ட சோக நாடகமாக நடத்த அவசியமில்லை என்கிறேன். ஆதவ் அர்ஜுனாவோடு திருமாவுக்கு இருந்த தொடர்புகள், இப்போது கூட்டணியாக சாத்தியமாகி இருக்கிறது. பாஜகவின் வார்ப்புகள் என்று tvk தரப்பையும் விஜயையும் திருமாவும் சொன்னார் நாமும் சொன்னோம்.
இப்போது திமுக கூட்டணியை உடைத்து விட்டதால், அந்த நிறம் அவர்கள் மீது மாறி விட்டதா என்றால் இல்லை. உண்மையில் இவர்கள் யார் என தெரியாமல், ஆனால் பாஜகவின் அதிகாரத்துக்கு முன்னால் மண்டியிடும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும் இவர்களுக்கு மதச்சார்பற்ற பெயிண்ட் அடிக்கும் வேலையை கம்யூனிஸ்ட் தோழர்களும், விசிகவினரும் விட வேண்டும். அது ஒன்றுதான் கோரிக்கை,. மற்றபடி, பதவி பேரங்களை விரைந்து முடித்து ஆளுநர் மாளிகைக்கு ஒரே ஒரு முறை மட்டும் செல்லுங்கள். அடிக்கடி அந்த வந்தே மாதரத்தை கேட்கச் சகியவில்லை!
— அருள்எழிலன், பத்திரிகையாளர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.