திருச்சி டாஸ்மார்க் பார்களில் விஜிலென்ஸ் ரெய்டு| Vigilance Raid in Trichy

0

திருச்சி டாஸ்மார்க் பார்களில் விஜிலென்ஸ் ரெய்டு | Vigilance Raid in Trichy

திருச்சி மாநகர பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முக்கிய அரசு அலுவலகங்களில் விஜிலன்ஸ் ரெய்டு நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணம் அதிகமாக புழங்கக்கூடிய அரசு அலுவலகங்களில் விஜிலென்ஸ் பிரிவினர் அதிரடியாக புகுந்து ரெய்டு அடித்து வருகின்றனர்.

இதில் சில அதிகாரிகள் லஞ்சம் பெற்று, சிக்கலில் சிக்கியும் உள்ளனர்.

அந்த வகையில் திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற திடீர் ரெய்டு ஒன்றில் தனி தாசில்தார் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்த நிலையில்,

தற்போது திருச்சி மாநகரில் உள்ள முக்கிய அரசு டாஸ்மாக் பார்களில் அதிக பணம் புழங்குவதாக விஜிலன்ஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,

திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள எலைட் பார், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பிரபல பழமுதிர் சோலைக்கு எதிரே அமைந்துள்ள பார்களில் மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் ஏசி மணிகண்டன் தலைமையிலான விஜிலன்ஸ் பிரிவினர் அதிரடி ஆய்வு செய்து வருகின்றனர்.

-இந்திரஜித்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.