120 நாட்களில் ஒன்றை நீங்கள் கவனித்தீர்களா ?
நண்பர்களே…
கடந்த 120 நாட்களில் ஒன்றை நீங்கள் கவனித்தீர்களா.!
கடந்த 5 ஆண்டுகளாக ஒரு அரசு தனது மக்களைப் பார்த்து படி படி என்று பிரச்சாரம் செய்தது.
படிக்க பணம் இல்லையா, அரசு பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம், வந்து படியுங்கள்.
அரசு கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம், வந்து படியுங்கள்.
கூடுதலாக உங்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி அளிக்கிறோம், அதில் கலந்துகொண்டு அரசு, தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு சென்று உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
IAS, IPS, IRS தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர ஊக்கத் தொகை வழங்குகிறோம். அதனை பயன்படுத்திக் கொண்டு எல்லா சமூகமும் பயன்பெறுங்கள் என்று ஒரு அரசு பிரச்சாரம் செய்து, மக்களை ஊக்குவித்து ஒரு அறிவுசார்ந்த சமூகத்தை வளர்த்தெடுக்க முயற்சித்தது.
ஆனால்…
கடந்த 120 நாட்களாக எங்கேயாவது, எப்போதாவது இப்படி ஒரு பிரச்சாரத்தை பார்த்தீர்களா.!
ஒரு நடிகனை முதலமைச்சராக்கி, கடந்த 15 ஆண்டுகளாக WhatsApp University என்ன பரப்புரை செய்ததோ, அதனை உண்மை என்று மக்களை நம்ப வைக்கும் விதமாக அவரை சட்டமன்றத்தில் நடிக்க வைத்துள்ளனர்.
— கந்தசாமி மாரியப்பன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.