திருச்சி மீன் மார்க்கெட்டில் மாமூல் கேட்டு மிரட்டிய போலீசார்- மைக்கில் விளாசிய டி.சி..
திருச்சி மீன் மார்க்கெட்டில் மாமூல் கேட்டு மிரட்டிய போலீசார்- மைக்கில் விளாசிய டி.சி..
கொரோனா காலத்தை கருத்திற்கொண்டு மக்கள் கூட்டம் சேராமல் இருப்பதற்காக மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக மீன் மார்க்கெட்டினை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாற்றியுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த ஒரு மாத காலமாக மீன் மார்க்கெட் பேருந்து நிலையங்களில் இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் நேற்று 26/06/2021 இரவு மீன் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு பணியிலிருந்த 2 காவல் மூத்த உதவி ஆய்வாளர்கள் மிரட்டி உள்ளதாக தெரியவருகிறது.
இத்தகவல் மெல்ல கசிந்து டி.சி காதுக்கு செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மைக்கில் அலைத்து வெளுத்து வாங்கி விட்டாராம்..
சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளில் ஒருவர் மத்திய பேருந்து நிலையத்தில் ரொம்ப ஃபேமஸான அதிகாரியாம், அப்படிப்பட்ட “செல்வ”-மான அதிகாரியான அவர ரோட்டு சாப்பாட்டு கடையில் கூட 100 ரூபா போலீஸ் வந்துட்டாருனு சொல்லுவாங்களாம்..
– ஜித்தன்