தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு வாய்ப்பா?மின்சாரத்துறை அமைச்சர் அளித்த ஷாக் பதில்…
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை மாநகரின் 56 சங்கங்கள் இணைந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு பாராட்டு விழாவை மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், எம்.எல்.ஏக்கள் கல்லாணை, கார்த்திகேயன், கோபிசன், தங்கபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றர் இதில் அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களுக்கு சங்கத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டு சிறுகுறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தேவையான கோரிக்கைகள் அடங்கிய மனு அமைச்சர் நிர்மல்குமாரிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் கூறியது ….
இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் யாராக இருந்தாலும் முதல்வர் மன்னிக்க மாட்டார். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்சாரத்துறை சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு நிதி ஆதாரங்கள் தேவை மதுரைக்கு புதிய ஆறு சப்சேஷன் தேவை இருந்தால்தான் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இதற்கெல்லாம் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தொலைநோக்குப் பார்வையில் நிறைய திட்டங்கள் செய்ய வேண்டியது உள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஒரே நேரத்தில் 60,000 பேர் திரண்டு விட்டனர். ஒருவர் தான் மயக்கம் அடைந்தார். அரைமணி நேரத்தில்அனைத்தும் சீர்செய்யப்பட்டது. குற்ற சம்பவங்கள் காவல்துறை சார்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மீனாட்சி அம்மன் கோவில் அருகே கொலை செய்யப்பட்டது நான்கு மணிநேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குற்ற சம்பவங்கள் தனிப்பட்ட காரணத்திற்காக நடந்தாலும் அதை கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் மதுகடையை அடைக்க நானேதான் கலெக்டர் மற்றும் மேலாளர் இடமும் தெரிவித்து அடைக்க சொன்னேன். முதல்வர் டெல்லிக்கு சென்றது ஆபீஸியல் சந்திப்பு மேகதாது அணை மற்றும் மீனவர்கள் தாக்கப்பட்டதால்தான் உடனடியாக சந்திப்பு இருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து கவர்னர் நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதற்காகவும்தான் முதல்வர் தெளிவான சிந்தனை மக்களுக்காக மட்டுமே பணியாற்றுவார். ஒரு நொடிகூட யாருக்காகவும் காம்ப்ரமைஸ் கிடையாது என்றார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.