திவால் ஆகிறதா, போக்குவரத்து கழகங்கள் ?
மீள முடியாத கடன்சுமையில் தமிழக போக்குவரத்து கழகங்கள் சிக்கித் தவிப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தற்போது தமிழக அரசின் சார்பில், போக்குவரத்து துறை சார்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கான இலவச அனுமதி தொடங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு அனுமதி, காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், முன்னாள் போக்குவரத்து பணியாளர்கள் வரையில் பல்வேறு சலுகை கட்டண பயணங்கள் அமலில் இருந்து வருகின்றன. இந்த பின்னணியில்தான், மகளிருக்கான இலவச பயண அனுமதியும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போதே, இதன் காரணமாக போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டும் வகையில், தமிழக அரசின் சார்பில் குறிப்பிட்ட தொகையை வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது. ஆனாலும் அந்த தொகையை முறையாக விடுவிப்பதில்லை. இதன் காரணமாக, ஏற்கெனவே கடனில் தள்ளாடும் போக்குவரத்து கழகங்கள் மேலும் நெருக்கடிக்குள்ளாகி வருகின்றன. கடன் அடைப்பதற்காக, வட்டிக்கு கடன் வாங்கி வட்டி கட்டும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதுதான் தமிழகத்தின் தற்போதைய பேரதிர்ச்சி. இந்த விவகாரங்கள் குறித்து விரிவாக அலசுகிறது, இந்த செய்தித் தொகுப்பு.
முழுமையான வீடியோவை காண
பெண்களுக்கு அனைத்து பேருந்திலும் இலவச பயணமா ? 😱 கடனில் தள்ளாடும் போக்குவரத்து கழகங்கள் !
— வே.தினகரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.