ஆதார் ரேசன் அட்டைகளை வீசி எறிந்த பழங்குடி மக்கள் !
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள அணிச்சம்பாளையம் கிராமத்தில் பழங்குடி இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். குடிமனை பட்டா கேட்டு ஓராண்டுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு அதனடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரின் அறிக்கை வருவாய் ஆய்வாளரின் அறிக்கை தயாரிக்கப்பட்டு கோலியனூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதற்கிடையில் சட்டமன்றத் தேர்தல் வந்ததால், மனு கிடப்பில் போடப்பட்டது.
சட்டமன்றத் தேர்தல் முடிந்து விழுப்புரம் வட்டாட்சியரை சந்தித்து பட்டா சம்மந்தமாக கேட்டபோது கோப்புகள் தொலைந்து விட்டது. மீண்டும் மனு கொடுங்கள் என்று அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறியதால், கொந்தளிப்புக்கு ஆளான பழங்குடியின மக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் நா.பிரசாந்த் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதார், ரேஷன் உள்ளிட்ட அரசின் அனைத்து ஆவணங்களையும் வீசி எறிந்து பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
— அங்குசம் செய்திப்பிரிவு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.