அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் பத்திரப்பதிவுத்துறை கலந்தாய்வு கூட்டம்
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் பதிவுத்துறை சார்பில் ஆவண பதிவு குறித்தான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் மாநகராட்சி ஆணையாளர், மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஆவண பதிவு ஆன்லைன் முறை நடைமுறைக்கு வர உள்ளதை பற்றி ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வருகை இல்லா பத்திரப்பதிவு ஆன்லைன் மூலம் கொண்டுவரப்படுகிறது என்றும் வருகின்ற 17ஆம் தேதி First Plot First Flat ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்படுவதாக தெரிவித்தார். 17ஆம் தேதி இதனை தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் என்றும் ஆன்லைன் முறை வந்தாலே எளிய மக்கள் அனைவருக்கும் எளிமையாகும் என்று கூறினார்.
மேலும் ஆவணங்களை 24 மணி நேரத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.