ரூபாய் 1.50 கோடி இழந்த வேளாண் பட்டதாரி !
திருச்சி மணப்பாறை ராஜீவ் நகர் ஆறாவது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் வேளாண் பட்டதாரி இவர் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் வேளாண்மை பட்டதாரியான நான் ஒரு நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக கடந்த 9 ஆண்டுகள் பணிபுரிந்தேன். நிறுவனத்தின் தேவைகளுக்காக வளர்ச்சிக்காக உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் எங்களிடம் கடன் கேட்டதன் அடிப்படையில் என் மனைவியின் நகை 85 பவுன் நகைகளை அடமானம் வைத்து எங்கள் குடும்பத்தார்களிடம் உறவினர்களிடம் நண்பர்களிடம் கடன் வாங்கி பல லட்சம் ரூபாய் கொடுத்தும் எங்களுக்கு நியாயமாக வரவேண்டிய தொகை அக்டோபர் 2025 வரை ரூபாய் ஒரு கோடியே 58 லட்சம் ஆகும் ஆனால் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து சதி திட்டம் தீட்டி எங்கள் பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார்கள்.
இது தொடர்பாக கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது பணத்தை திரும்பக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது மேலும் மனு அளித்தவர்கள் ஐஜி அலுவலகம் அருகே மோசடி நிறுவனத்தின் இயக்குனர்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.