கொள்ளிட கரையோரத்தில் சாராய ஊரல்கள்.. போலீசார் விசாரணை..

0

கொள்ளிட கரையோரத்தில் சாராய ஊரல்கள்.. போலீசார் விசாரணை..

மயிலாடுதுறை மாவட்டம் ‌புதுப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடியம்பாளையம், கோட்டை மேடு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் சிலர் சாராய ஊரல்கள் போட்டிருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, புதுபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா தலைமையிலான தனிப்படை  அமைக்கப்பட்டது.

அதன்மூலம் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோட்டைமேடு கொடியம்பாளையம் கொள்ளிட கரையோரப் பகுதிகளில் போடப்பட்டிருந்த ஒரு லட்சம் மதிப்பிலான சாராய ஊரல்களை கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து, வழக்கு பதிவு செய்து தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்..

ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.