தூர்வாரும் பணிகள் : முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தூர்வாரும் பணிகள் :
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் முதலைமுத்துவாரி, விண்ணமங்கலம் வாய்க்கால் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி துவங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன.

அதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்டத்தில் ரூ.20.45 கோடி மதிப்பில் 1068.45 கி.மீ. நீளத்திற்கு 189 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இத் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவே தஞ்சாவூர் வந்து பயணியர் மாளிகையில் தங்கினார்.


தூர்வாரப்பட்ட பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர், தஞ்சாவூர் அருகே ஆலக்குடி கிராமத்தில் முதலைமுத்துவாரியில் ரூ3.5 கி.மீ. தூரத்திற்கு ரூ20 லட்சம் செலவில் தூர்வாரப்பட்ட பணியையும், விண்ணமங்கலம் சி பிரிவு வாய்க்காலில் 920 மீட்டர் தூரம் ரூ.34,000 மதிப்பீட்டில் தூர்வாரப்பட்ட பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.