தஞ்சையில் விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம்
வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை 2026-2027 விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 3-7-2026 காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வோண்மைத் துறை அமைச்சர் வினோத், வேளாண்னமச் செயலர் பொ.சங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் ரேவதி, வேளாண்மை இணை இயக்குநா் சட்டப்பேரவை உறுப்பினா்கள் விஜய்சரவணன் , துரை, சந்திரசேகரன், வைத்திலிங்கம், காமராஜ், பூண்டிகலைவாணன், அண்ணாதுரை, அசோக்குமார், ராஜ்குமார் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலக்துகொண்டனர்.
விவசாயிகள் சுந்தர விமலநாதன், காவிரி தனபாலன், அய்யாக்கண்ணு தா்ம. சாமிநாதன், வாளமா் கோட்டை இளங்கோவன், ஏ.கே. ரவிசந்தர், வீரசேனன், ஜீவகுமார் ஆகியவா்கள் கடன் தள்ளுபடி நிவாரணம் போன்ற கருத்துக்களை கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான அனைத்த ஏற்பாடுகளையும் அனைத்து நிலை அலுவலா்களின் ஒத்துழைப்புடன் மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் சிறப்பாக செய்து இருந்தனா். கூட்டத்தின் முத்தாய்ப்பாக இது வரையிலும் யாரும் செய்யாத வகையில் பிறருக்கு உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு கொடுத்து சிறப்பு செய்தார்.
புதிய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. ரேவதி அவா்களுக்கு சபாஷ் மேடம்! தஞ்சாவூர், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
— தஞ்சை க.நடராசன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.