கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்- உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு !
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 நபர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை தற்பொழுது வழங்கக்கூடாது எனக் கோரிய பொதுநல மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் சீனி அஹமது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது மனுதாரர்கள் தரப்பில் தற்போதைய அரசு கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு கருணை அடிப்படையிலான பணியை வழங்க திட்டமிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இது போன்ற வழக்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது. கருணைப் பணி வழங்குவது விதிகளுக்கு எதிரானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் CV கார்த்திகேயன் சக்திவேல் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் அரசின் கொள்கை தொடர்பான முடிவில் தலையிட விரும்பவில்லை. இன்று நிகழ்வு நடைபெறலாம் ஆனால் தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் வரை 21/07 ஒத்திவைப்பு இந்த வழக்கில் TNPSC- யை நீதிமன்றம்தானாக முன்வந்து வழக்கில் சேர்த்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்









Comments are closed, but trackbacks and pingbacks are open.