காலத்துக்கும் இது வரலாறு….
நடிகர் ரவிமோகன் – ஆர்த்தி காதலித்து திருமணம் செய்தவர்கள், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. பாப் பாடகி கெனிஷாவுடன் திருமணத்துக்கு மீறிய உறவில் ரவி இருப்பதால், உன்னோட என்னால வாழமுடியாது என மனைவியிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய ரவி, எனக்கு கெனிஷா ஹீலிங் பயிற்சி தந்தார், நல்ல நண்பர் என உருட்டிவிட்டு அவருடனே போய் தங்கிவிட்டார். இவர்களின் விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
ஆர்த்தி vs ரவி கும்பல் இடையே மோதல் அதிகமானதால், ஆர்த்தி நீதிமன்றத்தை நாட அவுங்களைப்பத்தி எதுவும் பேசாத என கெனிஷாவுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் கெனிஷா ஒரு 30 நிமிட வீடியோ வெளியிட்டார், அதில் ஒருயிடத்தில், நடிகர் விஜய்யே த்ரிஷா கூட அஃப்யர் வச்சுட்டு சிஎம்மே ஆயிட்டாரு, நாங்க பண்ணது என்ன தப்பா? மக்கள் இதெல்லாம் பெருசா எடுத்துக்கமாட்டாங்க என்றுள்ளார்.
இப்படியொரு கேள்வி இவ்வளவு வேகமாக அதுவும் சினிமாத்துறையில் இருந்தே வரும் என எதிர்பார்க்கவில்லை, வந்துவிட்டது.
அதாவது தமிழ்நாடு முதலமைச்சரான விஜய்யே மனைவி, பிள்ளைகளை பிரிந்து இல்லீகல் உறவில் தான் இருக்கார், மக்கள் அதனை ஏத்துக்கிட்டாங்க என தன் தவறுக்கு அவரின் வாழ்க்கையை முன்னுதாரனமாக காட்டுகிறார்.
அடுத்தவர் கணவனை இவளுங்க கரெக்ட் செய்யறது தப்பில்லையாம், ஏன்டீ என் கணவனோட ஊர் சுத்தற, என் வாழ்க்கையை அழிக்கறன்னு கேள்வி கேட்பது தப்பாம்.
இதற்கெல்லாம் யார் காரணம்?
கள்ளக்காதல், கள்ளஉறவு, தம்பதியர் செய்யும் நம்பிக்கை துரோகம் போன்றவற்றை சமூகத்தில் நார்மலைஸ் செய்பவர்களே காரணம்.
தனிநபர்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் அது அவர்களின் பிரச்சனை, அவுங்க குடும்ப பிரச்சனை, சுற்றியுள்ளவர்களின் பிரச்சனை. மக்களை ஆட்சி செய்பவர்களிடம் குறைந்தப்பட்ச சமூக ஒழுக்கமாவுது இருக்க வேண்டாமா?
பிரான்ஸ் அதிபர் ஒரு மாடல் நடிகையுடன் கள்ளஉறவில் இருந்ததை தெரிந்து, நீ அதிபரா இருந்தா, பெரிய இவனா நீ எனக்கேட்டு அவரது மனைவி பளார் விட்டதை பிரான்ஸ் மக்கள் வரவேற்றுள்ளார்கள். அதிபர் ஆதரவாளர்கள் யாரும் முட்டுக்கொடுக்கவில்லை.
கெனிஷா சப்போட்டுக்கு அழைக்கும் விஜய், நடிகர் விஜய்யாக இருந்ததால் இதெல்லாம் சினிமாத்துறையில் சாதாரணம் என நாமும் கடந்தோம். அதை அவரது ரசிகர்கள் முன்பு முட்டுக்கொடுத்து நார்மலைஸ் செய்தார்கள். இப்போது விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கிறார், அவரே இப்படியொரு அயோக்கியத்தனம் செய்வதால் தற்குறிகளை தவிர தமிழ்நாட்டிலுள்ள மற்றவர்களுக்கு அவமானத்தை உருவாக்கி தந்துள்ளது.
திருமணமாகாத தற்குறிகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
— ராஜ்பிரியன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.