திருச்சியில் புதிய ரோட்டரி கவர்னர் பதவி ஏற்பு விழா !
ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000-ன் 2026- 27 புதிய மாவட்ட கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.பி.எஸ். மணி என்கிற ஆர். சுப்பிரமணி பதவி ஏற்பு விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் மாவட்ட கவர்னர் ஆக ஆர்.பி.எஸ். மணி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ரோட்டரி இயக்குனரும் சர்வதேச துணை தலைவருமான எம். முருகானந்தம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ரோட்டரி முன்னாள் சர்வதேச இயக்குனர் பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் ரோட்டரி கவர்னர் கார்த்திக், வருங்கால கவர்னர் லியோ பெலிக்ஸ் லூயிஸ், ஆனந்த ஜோதி ராஜ்குமார், மீனா சுப்பையா, ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 மீடியா பப்ளிசிட்டி ஆபிஸர் ரொட்டேரியன் ஏகேஎஸ் டாக்டர் கே சீனிவாசன், துணை ஆளுநர் சுபா பிரபு, நிகழ்ச்சி தலைவர் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் ரோட்டரி கிளப் முகமது நாசர், செயலாளர் முகமது ரியாஸ் மற்றும் அனைத்து ரோட்டரி மாவட்ட கவர்னர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட தலைமை குறித்த கருத்தரங்கமும் நடைபெற்றது.
மாவட்ட ரோட்டரி கவர்னராக பதவி ஏற்ற ஆர்.பி.எஸ். மணியுடன் சர்வதேச ரோட்டரி துணை தலைவர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.