“ஜோசப் விஜய் ஒழுக்கமானவர்”- சொல்கிறார் ‘மொதராத்திரி’ நடிகை!
கடந்த வாரம் ரிலீசான ‘மொதராத்திரி’ படத்தில் ஹீரோ ரிஷிகாந்தின் தங்கச்சி கீர்த்தியாக நடித்தவர் சுமித்ராதேவி. சென்னை குரோம்பேட்டை வைஷ்ணவ் காலேஜில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு சினிமாவுக்குள் எண்ட்ரியாகியுள்ளார். தெளிவான தமிழ் உச்சரிப்பு, வசீகரிக்கும் மாநிறம் இவை தான் சுமித்ரா தேவியின் ப்ளஸ் பாயிண்டுகள்.

அந்த சுமித்ரா தேவி என்ன சொல்றாருன்னா, “எனது சினிமாப் பயணம் இந்த “மொத ராத்திரி’யிலிருந்து தான் தொடங்குகிறது. இப்படத்தில் நான் உட்பட ஏகப்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கிய மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு நன்றி. எனது கேரக்டரை சிறப்பாக காட்டிய டைரக்டர் ராஜா கருப்பசாமி சாருக்கு நன்றி.
நடிகைகளில் தமன்னா எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நடிகர்களில் ஜோசப் விஜய்யின் தீவிர ரசிகை நான். அவரது ஒழுக்கம், இளைஞர்களுக்கு உத்வேகம்” என்கிறார்.
— மோனிஷா







Comments are closed, but trackbacks and pingbacks are open.