கர்மவீரர் காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா- திரளாக பங்கேற்க திமுக அழைப்பு!
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெருந்தலைவர் காமராசரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவரது பிறந்தநாளான நாளை (புதன்கிழமை) காலை 8 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கழக முதன்மை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான கே.என்.நேரு தலைமையிலும், க.வைரமணி, காடுவெட்டி ந.தியாகராஜன், மு.அன்பழகன் ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு கர்மவீரர் காமராசரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறோம்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.