எம்.ஏ.எம்.பி பள்ளியில் பொங்கலோ பொங்கல் நிகழ்வு
எம்.ஏ.எம்.பி-பள்ளி, இன்டர்னல் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் செல் (lQAC) & தண்ணீர் அமைப்பு உங்களை பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கு அழைக்கிறது.
11.01.25 சனிக்கிழமை, 11.00 to 3.00 மணிவரை, M.A.M.B_S இணைப்பு திறந்த ஆடிட்டோரியம், சிறுகனூர், திருச்சியில் MAMB – S செயலாளர் & CEO-மாஸ்டர் ஜி.ஐ திருமதி. பாத்திமா பத்தூல் மாலுக், மற்றும் MAMB-S இயக்குனர் டாக்டர் எம். ஹேமலதா ஆகியோர் தலைமையிலும்.
சிறப்பு விருந்தினர்களாக மக்கள் சக்தி இயக்கம், மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், தண்ணீர் அமைப்பு இணைச் செயலாளர் ஆர்.கே.ராஜா கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளனா்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு பலவிதமாக கலை நிகழ்ச்சிகள் ரங்கோலி, உறியடி, கயிறு இழுத்தல், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் நிகழ்வுகள், பாட்டு, பொங்கல் செய்தல், மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா போன்ற போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டிகளில் சிறப்பாக பங்கு பெற்றவர்களுக்க பாராட்டுகளும், பரிசுகளும் வழங்குகிறார்கள்