தஞ்சாவூர் பொதுப்பணித்துறை வெண்ணாறு வடிநிலக் கோட்டம் ஆனந்த காவேரி என்பது வெண்ணாற்றில் கச்சமங்கலம் தலைப்பில் இருந்து பிரிந்து பலமைல்கள் கடத்து தொண்டராயன்பாடி, மாரனேரி, கடமங்குட, பூதலூர், சித்திரக்குடி வழியாக கள்ளப் பெரம்பூர் ஏரியை சென்றடைகின்றது.
இப்பகுதிகளில் பலநூறு ஏக்கர்கள் அளவில் பாசன வசதி பெறுகின்றது. இச்சூழலில் விச்சலூர் என்ற ஊரில் இருந்து மேல களிங்கு வரையிலும் உள்ள ஆனந்த காவேரி கரை மிகவும் மோசமான நிலையிலும், இருபுறம் விவசாயிகள் விவசாய காலங்களில் செல்லும் நேரங்களில் முட்செடிகள் மீது உரசி செல்லும் தொண்டராயன்பாடியில் நிலை ஏற்படுகின்றது.
அதேபோல் தொண்டராயன்பாடியில் இருந்து களிங்கி வரை வரும் ஆனந்த காவேரி கரையும் பழுதாகி, முட்செடிகளால் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. பல கோடிகளை விரையம் செய்யும் வெண்ணாறு வடிநில கோட்டம் பொதுப்பணித்துறையினாின் சம்மந்த பொறியாளர்கள் நடவடிக்கை எடுத்து ஆனந்த காவேரி கரைகளை பாதுகப்பார்களா? என்பதே ஒட்டு மொத்த விவசாயிகளின் குரலாக ஒலிக்கின்றது.
— தஞ்சை க.நடராசன்





Comments are closed, but trackbacks and pingbacks are open.