ரோட்டோ எக்ஸ்போ 2024 திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் !
திருச்சி ரோட்டரி மாவட்டம் 3000 திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளைஸ் இணைந்து நடத்தும் ரோட்டோ எக்ஸ்போ 2024 திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ஆரம்பம்.
இதில் அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள் உடன் திருச்சி மேயர் மு .அன்பழகன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கோவிந்தராஜுலு வணிக சங்கத் தலைவர், திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையை இயக்குனர் டாக்டர் பிரதீபா , ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
திருமதி ஆனந்த ஜோதி கவர்னர் மற்றும் ரோட்டரி சங்கத் மற்றும் வருங்கால ரோட்டரி கவர்னர்கள் ராஜா கோவிந்தசாமி 2024 to 2025 ஜே கார்த்திக் 2025 முதல் 2026, ஆர் பி எஸ் மணி 2026 முதல் 2027 வரை ரொட்டேரியன் மின்னல் சரவணன் ரொட்டேரியன், எஸ் பி சுப்பிரமணியன் மற்றும் ரொட்டேரியன் பர்ஸானா ரொட்டேரியன் கேசவன் மற்றும் ரொட்டேரியன் முகமது தாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த எக்ஸ்போவின் முக்கிய நிகழ்வாக அரசு பள்ளியில் பெண்களுக்கு கழிப்பறை கட்டும் நோக்கத்தின் நிதி திரட்டும் முயற்சியில் ரோட்டரி சங்கமும் ஜோசப் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்துகிறார்கள். இதில் மூன்று நாட்கள் மே 31 மற்றும் ஜூன் ஒன்று மற்றும் இரண்டாம் தேதி வரை இந்த ரோட்டரி எக்ஸ்போன் நடைபெறுகிறது.