உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாணவன் ஹிதேஷ் !
ஜெர்மனியில் உள்ள சுஹ்ல் நகரில் நடைபெற்ற ISSF உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த ஹிதேஷ், 50 மீட்டர் ரைபில் 3 பொசிஷன்ஸ் ஜூனியர் ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார்.
மதுரை அண்ணாநகரை சேர்ந்த சீனிவாசன் – லிங்கம்மாள் தம்பதியினரின் மகனான ஹிதேஷ் சேது பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியர் பயின்று வருகிறார். கடந்த 7 வருடங்களாக மதுரை ரைபிள் கிளப் மையத்தில் துப்பாக்கி சூடு பயிற்சி பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதுரை ரைபிள் கிளப் செயலாளர் வேல்சங்கர் மற்றும் பொருளார் கிஷோர் உள்ளிட்டோர், வெண்கல பதக்கத்தோடு மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஹிதேஷை வரவேற்று வாழ்த்துகளை பகிர்ந்தார்கள்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.