ஹொம்பாலே பிலிம்ஸ் + த.செ.ஞானவேல்=சூர்யா 48
கே.ஜி.எஃப்’, காந்தாரா, சலார் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் படங்களைத் தயாரித்த இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் சூர்யாவின் 48- ஆவது படத்தை தயாரிக்கின்றது. ‘ஜெய்பீம்’ ‘ வேட்டையன்’ படங்களுக்கு அடுத்து இப்படத்தை டைரக்ட் பண்ணுகிறார் த.செ.ஞானவேல்.
இது குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் என்ன சொல்றாருன்னா ……
“இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகராக விளங்கும் சூர்யாவை, முப்பது ஆண்டுகளுக்கு மேல் மக்கள் கொண்டாடி வருகின்றனர். வணிக வெற்றியையும், விமர் சகர்களின் பாராட்டையும் ஒருசேர பெறுவதில் தனித்து விளங்கும் சூர்யா அவர்களுடன் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறது.

இந்திய அளவில் பெரும் வெற்றியையும், கவனத்தையும் பெறப்போகும் படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். The one சூர்யா அவர்களையும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களையும் ஹொம்பாலே பிலிம்ஸ் குடும்பத்தில் இணைய மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்” என்கிறார்.
கயாது லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு : எஸ்.ஆர்.கதிர், இசை : சாய் அபயங்கர் தயாரிப்பு வடிவமைப்பு : கே.கதிர், திரைக்கதை: பா.கிருத்திகா, எடிட்டிங் : பிலோமின்ராஜ், பிஆர்ஓ: ‘எஸ்-2’ சதீஷ். ஜூலை 22-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.