MGR காலத்தில் இருந்து இதான் நடக்குது…
கமல் நடித்த சத்யா திரைப்படம் 1988 ஆம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி ரிலீஸ் ஆனது முதல் நாள் வசூல் 21 லட்சம் அது அப்போது மிகப் பெரிய தொகை. அதை அப்படியே சரிகா ஸ்ருதியுடன் வந்து தேசிய கண் பார்வையற்றோர் அமைப்புக்கு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் வழங்கினார் கமல்ஹாசன்❤️.
இந்தியாவிலேயே ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி உடல் தானமும் ரத்த தானமும் அதிகம் செய்த ரசிகர்கள் கமலின் ரசிகர்கள்தான், விளம்பரமே நடிக்காமல் இருந்த கமல் விளம்பர படத்தில் நடித்து அதில் வந்த காசை பெற்றால் தான் பிள்ளையா திட்டத்தில் புற்றுநோய் குழந்தைகளுக்கு கொடுத்தார். இந்தி எதிர்ப்பு, ஈழ விடுதலை போன்ற பல போராட்டங்களில் கலந்து கொண்டார்.
சினிமாவை தவிர்த்து சமூகத்திற்காக தன்னால் இயன்ற அளவு என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து இருக்கிறார். ஆனால் இவர் அரசியலுக்கு வந்தபோது நீங்க ஏன் அரசியலுக்கு வந்தீங்க ரஜினிய வர சொல்லுங்க அப்படின்னுதான் எல்லாரும் கேட்டாங்க..அதே மாதிரிதான் இப்பவும் சூர்யா மாதிரி ஆளுங்க அரசியலுக்கு வரவில்லை என்றால் யாரும் கண்டு கொள்வதே இல்லை ஆனா விஜய் அரசியலுக்கு வாங்க..அஜீத் அரசியலுக்கு வாங்கன்னு சொல்லுவாங்க.
MGR காலத்தில் இருந்து இதான் நடக்குது நல்லது செய்றவன் இவனுக கண்ணுக்கு தெரியாது சினிமாவில் நல்லது செய்வது போல நடிக்கும் போலி ஹீரோக்களை மட்டும் தான் இவர்கள் கொண்டாடுவார்கள். தற்குறி கூட்டம் அன்றிலிருந்து இன்று வரை இருக்கத்தான் செய்கிறார்கள்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.