ஞானவேல்ராஜா—தனஞ்செயன் கூட்டணியின் திருகுஜாலம்!

0

ஞானவேல்ராஜா—தனஞ்செயன் கூட்டணியின் திருகுஜாலம்!

படத்தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்து சில ஊத்தல் படங்களை எடுத்த தனஞ்செயன் தான் இப்போது ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ க்ரீன்’ தயாரிப்பு நிறுவனத்தின் புரொடக்‌ஷன் கண்ட்ரோலராக இருக்கார். அப்பப்ப ஏதாவது ஒரு சங்கத்தை ஆரம்பித்து, அடிக்கடி அதை கலைத்துவிடுவார் தனஞ்செயன். சமீபத்தில் கூட, ”சினிமாவுக்கு திரைக்கதை எழுதத் தெரியலையா?  எங்ககிட்ட வாங்க” என்ற பில்டப்புடன் மதன்கார்க்கியை கூட்டுச் சேர்ந்து கொண்டு ஒரு கம்பெனியை ஆரம்பித்தார், திரைக்கதை எழுதுவதில் டோட்டல் ஃபெயிலியரான தனஞ்செயன்.

இப்படிப்பட்ட தனஞ்செயன் தான், “கிருஷ்ணாவுக்கு அப்பப்ப ஏதாவது செலவுக்கு பணம் கொடுங்க, சம்பளம் எதுவும் கொடுக்காதீங்க” என்ற பிட்டைப் போட்டுள்ளார்.

தனஞ்செயன்
தனஞ்செயன்

தனஞ்செயன் அப்படி என்றால், ஞானவேல்ராஜாவோ அதற்குமேல் ஒருபடி சென்றுவிட்டார்.  சூர்யா—கார்த்தி பிரதர்ஸின் உறவினரான ஞானவேல்ராஜாவின் சினிமா எண்ட்ரியே அந்த பிரதர்களால் தான். ஆரம்பத்தில் அவர்கள் இருவரையும் வைத்துத் தான் படங்களை எடுத்தார். கையில் சில கோடிகள் புழங்க ஆரம்பித்ததும் ஞானவேல்ராஜாவின் பழக்கமும் வழக்கமும் மாற ஆரம்பித்தது.

இதனால் ஞானவேல்ராஜாவுடனான பழக்கத்தைக் குறைக்க ஆரம்பித்துவிட்டனர் பிரதர்ஸ். அந்தக் கடுப்பில் தான் ‘மும்பையில் 70 கோடியில் வீடு வாங்கி, சூர்யாவும் ஜோதிகாவும் செட்டிலாகிவிட்டனர்’ என்ற ஃபேக் நியூசைக் கசியவிட்டுள்ளார் ஞானவேல்ராஜா.

–மதுரைமாறன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.