யதேச்சையாக நேற்றைய (ஆக-30) தினமலரின் இணைப்பான வாரமலர் படிக்க நேர்ந்தது. அந்துமணியார் கேள்வி பதில் பகுதியில், “லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்தால் ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என தமிழக அரசு அறிவித்துள்ளது பற்றி என்று ஒருவர் கேட்கிறார். “அப்படி ஒரு உத்தரவே கிடையாது, அது வதந்தி” என்று பத்திரிகை தரப்பில் சொல்லவேயில்லை. மாறாக,” இது நல்ல சந்தர்ப்பம். மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்…” என பதில் அளிக்கிறார். எல்லாவற்றையும் விட சிறப்பு இந்த கேள்வியை அங்கீகரித்து 1,500 ரூபாய் பம்பர் பரிசு அறிவிப்பு வேறு.
“நல்ல ஆட்சி வேண்டும் என்று சிந்தித்து ஓட்டு போட்ட மக்களாகிய நமக்கு” என எழுதும் பத்திரிகையாளருக்கு என்ன பரிசு என்பதையும் அறிவித்திருக்கலாம். ஏதோ ஒரே ஒருவர் எழுதும் facebook பதிவு என்றால் கூட பரவாயில்லை தவறுகள் நேர வாய்ப்புண்டு. ஆனால், ஒரு நாளிதழில் பல கட்ட சரிபார்ப்புகளை தாண்டித்தான் செய்தி வர முடியும் என்ற நிலையில், எப்படி இதெல்லாம் முடிகிறது?
ஏழுமலை வெங்கடேஷ், பத்திரிகையாளர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.