வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றி !
ஊடகங்கள் வெளிப்படுத்தாத ஒரு முக்கிய தகவலைப் பகிர்கிறேன். தபால் வாக்குகளில், திமுக 163 தொகுதிகளிலும், அதிமுக 46 தொகுதிகளிலும், தவெக 25 தொகுதிகளிலும், முன்னிலை பெற்றுள்ளது.
பதிவான தபால் வாக்குகளில், திமுக 47 முதல் 52 சதமும், அதிமுக 30 முதல் 35 சதமும், தவெக 12 முதல் 17 சதமும் பெற்றுள்ளது. மூன்று நாளாக ஒவ்வொரு தொகுதியாக தேடி தேடி எடுத்துள்ளேன். தேர்தல் ஆணையம் முழுமையாக இதை வெளியிடவில்லை. ஆனால், மேற்கண்ட முன்னிலை வகிக்கும் தொகுதிகளில் வாக்கு இயந்திரத்தில் திமுக பின்னோக்கி செல்வதாக உள்ளது.
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில், முதலமைச்சர் 982 வாக்குகளும், அதிமுக 215 வாக்குகளும், தவெக 383 வாக்குகளும், நாதக 34 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இப்போதும் தெளிவாகச் சொல்கிறேன். தவெக வெற்றி வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றி. இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தால், இதுவே வெற்றியாக வந்திருக்கும்.
தேர்தல் கணிப்புக்காக ஓராண்டு காலம் பலவேறு கட்டங்களில் தொடர்ந்து 234 தொகுதிகளுக்கும் பயணித்தவன் என்பதால் என்னால் தேர்தல் முடிவை ஏற்க இயலாமல் உள்ளது.
– சூர்யா சேவியர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.