நிரந்த மருத்துவர்கள் இல்லாமல் முதல்வர் திறந்து வைத்த திருச்சி நகர்ப்புற நல வாழ்வு மையம் !

இம்மையத்திற்கு தற்போது வரை நிரந்தர மருத்துவர், செவிலியர் நியமிக்கப்படவில்லை. தற்காலிகமாக வேறு பணியில் இருக்கும் மருத்துவரும், செவிலியரும் வருகை புரிந்து காலை வேளையில் மட்டுமே,

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நிரந்த மருத்துவர்கள் இல்லாமல் முதல்வர் திறந்து வைத்த திருச்சி நகர்ப்புற நல வாழ்வு மையம் !

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண்.23ல் நகர்ப்புற நல வாழ்வு மையம் (உறையூர் குறத்தெரு) கடந்த 06.06.2023 ல் தமிழக முதல்வரால் காணொளி காட்சி வாயிலாக திறக்கப்பட்டது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்நிலையில் இம்மையத்திற்கு தற்போது வரை நிரந்தர மருத்துவர், செவிலியர் நியமிக்கப்படவில்லை. தற்காலிகமாக வேறு பணியில் இருக்கும் மருத்துவரும், செவிலியரும் வருகை புரிந்து காலை வேளையில் மட்டுமே, மருத்துவம் பார்க்கின்றனர். 50 பேர் வரை காலையில் மட்டும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மாலை நேரத்தில் திறப்பதில்லை.

மேற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதாலும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 23வது வார்டு நகர்ப்புற நல வாழ்வு மையத்திற்கு காலை, மாலை இருநேரமும் வருகை தந்து சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர், செவிலியர் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் குமார் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.