கிராமபுற பெண்களின் தொழில் முனைவை ஊக்குவிக்கும் ஆலோசனை கூட்டம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

TN-RISE மகளிர் புத்தொழில் கவுன்சில், மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள பெண்களிடையே தொழில் முனைவை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் பெண்கள் தலைமையிலான/சொந்தமாக உள்ள நிறுவனங்களுக்கு தனிப் பயனாக்கப்பட்ட சந்தை இணைப்புகள், நிதிமற்றும் செயல்பாட்டு ஆலோசனைகளை வழங்குகிறது.

பெண் தொழில் முனைவோர் மத்தியில் தங்களின் தொழிலுக்குத் தேவையான இணக்கப் பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள் இல்லாதது அவர்களின் தொழிலின் முன்னேற்றத்திற்கும் விரிவாக்கத்திற்கும் ஒருபெரும் தடையாகவுள்ளது.

இனிய ரமலான் வாழ்த்துகள்

பெண் தொழில் முனைவேர்
பெண் தொழில் முனைவேர்

இதுகுறித்து, திருச்சி மாவட்டம் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் உள்ள தொழில்முனைவோர் நிறுவனங்களுக்கு அடிப்படை மற்றும் மேம்பட்ட இணக்கசேவைகளை வழங்குவதற்காக திருச்சியில் Compliance Mela-வினை TN-RISE ஏற்பாடு செய்துள்ளது. PAN -(நிரந்தரகணக்குஎண்), TAN – (வரி மூல வசூல் (அ) வரி களித்தல் எண்,உதயம் (UDYAM), FSSAI – இந்திய உணவுபாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சான்று, GST  – சரக்குமற்றும் சேவை வரி, வர்த்தக முத்திரை (Trade Mark), காப்புரிமை தாக்கல் (Patent Filing), DPIIT பதிவு (DPIIT Registration), நிறுவனப் பதிவு (Company Registration).

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இறக்குமதி ஏற்றுமதி சான்றிதழ் பதிவு (Import Export Certificate Registration, ஆயுஷ் சான்றிதழ் பதிவு (AYUSH Certificate Registration), NPOP சான்றிதழ் விண்ணப்பம் (NPOP Certificate Application), இன்குபேஷன் டிரைவ் (Incubation Drive), கடன் வசதி இணைப்பு (Credit Facilitation) பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் உதவி (Packaging and Labeling Drive)  மேற்காண் சேவைகளின் மூலம் தொழில் முனைவோர் தங்கள் நிறுவனங்களை முறையான இணக்கங்களுடன் முறைப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

நிகழ்ச்சிநடைபெறும் இடம்:

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

ஸ்ரீமதி இந்திராகாந்திகல்லூரி,

எண்.369,கல்லூரி சாலை,

சத்திரம் அருகில்,தெப்பக்குளம்,

திருச்சி,

தமிழ்நாடு – 620002     

12.02.2025அன்றுகாலை 10.00 மணி – மாலை 6.00 மணி

 

இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்டஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.