தங்கப்பெண் சொன்ன கதை !

சிறார் இலக்கியம்- நூல் அறிமுகம் -6

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தங்கப்பெண் சொன்ன கதை !

ஆசிரியர் : சாய் மகஸ்ரீ கவின்குமார்

இந்த வார அங்குசம் வார இதழில்…

எம்.ஜே பப்ளிகேஷன்ஸ், திருச்சி-1. செல்:- 99434 28994.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விலை ரூ 100/-

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

தற்காலத்தில் குழந்தைகளுக்காகக் குழந்தைகளே கதைகள் எழுதுவது அதிகரித்துள்ளது. சாய் மகஸ்ரீ தம் ஐந்து வயதில் இக்கதைகளை எழுதியுள்ளார். குழந்தைகளின் கற்பனைக்கு எல்லையில்லை. அவர்களின் படைப்புகளை வாசிக்க நாமும் சில நிமிடங்கள் குழந்தையாக மாறவேண்டும்.

இதில் 10 கதைகள் உள்ளன. குடிசையில் வாழும் சிறுமியின் பெயர் தங்கப்பெண்! காட்டுக்குத் தினமும் போய்த் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் கதை சொல்லும் தங்கப்பெண்ணுக்கு டைனோசர் தங்கமாலையைப் பரிசாகக் கொடுக்கிறது. அடுத்த கதையில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் யானைக்குக் கண்ணும் தலையும் பாதிக்கப்பட்டு மயக்கம் வருகிறது. தொலைக்காட்சி பார்க்காமல் இருக்க விளையாட்டு ஒன்றே மாற்றுவழி என்று விலங்குகள் கூடி மிகச் சரியாக முடிவெடுக்கின்றன.

இப்படி, எளிய மொழியில் வளமான கற்பனையோடு கூடிய குட்டிக் கதைகள். இந்தக் கதைகளுக்கான ஓவியங்களையும் குழந்தைகளே வரைந்துள்ளார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.