ஒரு சவாலான வருங்காலம் காத்திருக்கிறது !
சுகாதாரத் துறை, போக்குவரத்து, உயர் கல்வி, தொழில்துறை, பொது விநியோகம் இப்படி எத்தனையோ துறைகளில் தமிழ்நாடு இன்று அடைந்திருக்கும் முன்னேற்றம் எந்த வட மாநிலத்துடனும் ஒப்பிட முடியாதது. மருத்துவக் கட்டமைப்பு போன்ற அம்சங்களில் பல வெளிநாடுகளுடன் கூட ஒப்பிட முடியாது. அந்த அளவுக்கு நாம் முன்னே இருக்கிறோம். சமீபத்தில் பீகார் சென்றுவந்தபோது இதை கண்கூடாக பார்த்தேன்.
இந்த வளர்ச்சியின் அருமை அறியாத மக்கள், சும்மா ஒரு Fun-க்கு மாத்திக்குத்தி, எந்த தெளிவுமில்லாத ஒரு கட்சியை ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் ஆளும் பேருமாக மெல்ல மெல்ல இழுத்து வந்த அந்த சக்கரத்தை இவர்கள் எவ்வளவு தூரத்துக்குப் பின்னோக்கி கொண்டு செல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. நிழலின் அருமை வெயிலில் தெரியும், அனுபவிக்கட்டும் என தோன்றுகிறதுதான். ஆனால் உள்ளுக்குள் அச்சமாக இருக்கிறது. எந்த வித கூர்நோக்கும் இல்லாத இவர்கள் என்ன கந்தரிகோலம் செய்யப் போகிறார்களோ?
வெற்றி பெற்றுவிட்டதினாலேயே இனிமேல் விஜய் பாணி Superficial approach-ஐ அனைத்து கட்சிகளும் பின்பற்ற தொடங்குவார்கள். Social media strategy மட்டுமே அரசியல் என்றாகும். அந்த உள்ளீடற்ற கூச்சல் கும்பலுடன் போட்டியிட இறங்கினால் அந்த களத்தில் தவெக Cult குழுவை விஞ்ச முடியாது. இந்த காயடிக்கப்பட்ட Mob lynching அரசியலுக்கு ஆட்டத்திருப்பர் அந்தஸ்து கொடுத்து, கொள்கை விளக்க விளக்குமாற்றை கட்டுவார்கள் நமது ஊடகர்கள். ஒரு சவாலான வருங்காலம் காத்திருக்கிறது.
— பாரதி தம்பி







Comments are closed, but trackbacks and pingbacks are open.