*ஐஸ்வர்யா லட்சுமி தொடங்கி வைத்த ‘துகில்’*
பாரம்பரிய மிக்க கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட பட்டு சேலைகளையும் , தூய பருத்தி சேலைகளையும் விற்பனை செய்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கவர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் ‘துகில்’ எனும் நிறுவனத்தின் புதிய கிளையை சென்னை- அடையாறில் ஏப்ரல் 30 அட்சய திருதியை நாளில் திறந்து வைத்து முதல் விற்பனையும் ஆரம்பித்து வைத்தார் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தொழிலதிபர்கள் வர்ஷா மற்றும் ஜெயக்குமார் ஆகியோரால் 2022 ஆம் ஆண்டில் ‘துகில்’ முதல் கிளை ஆரம்பிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் வண்ணம் & வடிவமைப்பு ஆகியவற்றை தேர்வு செய்தாலும்.. அதனையும் அவர்கள் வியக்க வைக்கும் அளவில் நேர்த்தியாகவும் பாரம்பரியத்துடனும் பட்டு சேலைகள்- பருத்தி சேலைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து தருகிறது ‘துகில்’. வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் ஆடைகள் கிடைக்கும்.
— மதுரை மாறன்.