200 ஆண்டுகளுக்கு முன்னால், சாதிக் கொடுமைகளும், ஆதிக்கச் சமூகத்தின் அநீதிகள் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த புரட்சிகர சிந்தனையாளர்களான சாவித்திரிபாய் பூலேவும், அவர் கணவர் ஜோதிபா பூலேவும், இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாகச் சாதிக்கொடுமைக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் எப்படியெல்லாம் போராடினார்கள்? என்னென்ன சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்? அதற்காக அவர்கள் சந்தித்த பிரச்சினைகளும், சவால்களும் என்னென்ன? எப்படி அவற்றையெல்லாம் சமாளித்தார்கள்? என்பதையெல்லாம் இளையோர் மட்டுமின்றிப் பெரியவர்களும் விரிவாக அறிந்து கொள்ளும் வண்ணம் பஞ்சு மிட்டாய் பிரபு அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார்.
சாவித்திரிபாய் பூலேவு பள்ளிக்குப் பாடம் நடத்த சென்ற போது, இவர் மேல் சேற்றையும் சாணியையும் கரைத்து ஊற்றினார்களாம். இந்த எதிர்ப்புகளையெல்லாம் தைரியமாகச் சமாளித்துக் கல்வி கற்பித்து, வரலாற்றில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை என்ற பெருமைக்குரியவர். இவரின் வரலாற்றை அனைவரும் அவசியமும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சாவித்திரியின் பள்ளி (இளையோர் இலக்கியம்)
ஆசிரியர் பஞ்சு மிட்டாய் பிரபு
வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18
விலை ரூ 60/-






Comments are closed, but trackbacks and pingbacks are open.