சிறார் நூல் அறிமுகம் !
நூல்: வன தேவதை
நூலாசிரியர்: நான்சி கோமகன்,
பதிப்பகம் :நெஸ்லிங் புக்ஸ் பப்ளிஷிங் அன்ட், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் (பி) லிட்.,
சென்னை – 600 050
செல் : 044 – 26251968, 26258410
நீண்ட ஆண்டுகள் சிம்பான்சிகளோடு நெருங்கிப் பழகி அதன் பரிணாம வளர்ச்சி மனித குலத்தோடு எவ்வாறு ஒத்து வருகிறது என்பதை பள்ளி படிப்பைத் தாண்டாத ஜேன் எவ்வாறு ஆய்வு செய்து வருகிறார் என்பது குறித்தும், அவரின் ஆர்வம், தன்னம்பிக்கை, உழைப்பு, உயிர்கள்மேல் செலுத்தும் அன்பு ஆகியவை வனங்கள் மற்றும் வன உயிர்கள் வாழ்வியலில் எவ்வித மாற்றத்தை கொண்டுள்ளது என்பது குறித்தும் இந்நூல் பேசுகிறது.
ஜேனின் தாயாரின் ஊக்கம் எந்தளவிற்கு அவரின் வாழ்வை உயர்த்தியுள்ளது என்ற உதாரணத்திலிருந்து, தன்னம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்; சாதிப்பதற்கு ஆண் பெண் பேதம் இல்லை என்பதை உலகம் போற்றும் ஜேன் குடால் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. சிறுவர்களின் வாசிப்பின் வாயிலைத் திறக்கவும், உயிர்கள் மேல் அவர்கள் நேசம் கொள்ளச் செய்யவும் சிறுவர்கள் கையில் பரிசளிக்க வேண்டிய நூல் வன தேவதை.







Comments are closed, but trackbacks and pingbacks are open.