ஸ்ரீரங்கத்தில் பிரபல கேங்ஸ்டர் கைது… மாநகர காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை
ஸ்ரீரங்கத்தில் பிரபல கேங்ஸ்டர் கைது..
திருச்சி போலிஸ் கமிஷனர் அதிரடி
![](https://angusam.com/wp-content/uploads/2020/09/4a91cee2-3db2-46b2-b65a-8419efd35071-218x300.jpg)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 9 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாள பணிக்கு வந்திருந்த வடமாநில இளைஞர்களிடம் கஞ்சா போதையில் சண்டைபோட்டு பாட்டிலால் குத்தியுள்ளார். இதனால் வடமாநில இளைஞர் ஒருவர் பலத்த காயத்திற்கு உட்பட்டு மூன்று தையல் போட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது தொடர்பாக அப்போது ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
![](https://angusam.com/wp-content/uploads/2020/09/loganathan-IPS-267x300.jpeg)
இதனை தொடர்ந்து திருச்சி போலிஸ் கமிஷனர் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை விரைவில் துரித நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருந்ததை அடுத்து நேற்று முன்தினம் 23/09/2020 ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடியை ஸ்ரீரங்க காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையிலான குழு கைது செய்தது.
![ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி](https://angusam.com/wp-content/uploads/2020/09/61ce2d5a-7f85-417a-ae97-fbcf9e09dae7-300x300.jpg)
கைது செய்யப்பட்ட நபர் ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவை சேர்ந்த மகேஸ்வரன் என்றும் அவர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், மேலும் அவர் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தகவலறிந்த அடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
– ஜித்தன்
கோவில் நகரமாம் ஸ்ரீரங்கத்தை கொலை நகரமாக மாற்றி வரும் கேங்ஸ்டர்கள்…