காணாமல் போன பயணிகள் நிழற்குடை! காந்தி மார்க்கெட்டில் பயணிகள் அவதி!
திருச்சி மாநகரம் பரபரப்பாக இயங்கும் ஒரு மிகப் பெரிய மாநிலத்தின் மையப்பகுதியாகும். இங்கு இருந்து தமிழகத்தின் பலவேறு ஊர்களுக்கும் செல்லும் பேருந்து வசதியுள்ளது. மேலும் பஞ்சப்பூரில் செயல்பட்டு வரும் பல கோடி மதிப்புள்ள தரமான கலைஞர் பேருந்து முணையத்திருந்து பல ஊா்களுக்கும் பேருந்து இயக்கம் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் திருச்சிராப்பள்ளி காக்தி மார்க்கெட் அதை ஓட்டிய மயிலம் சந்தையில் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி பயன் அடையலாம். இங்குள்ள பூ மார்க்கட்டில் அனைத்து பூக்களும், மாலைகளும் எப்பொழுதும் கிடைக்கும் , பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கு காக்தி மார்க்கட்டில் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து காய்கறிகள் வங்கி சென்று வருகின்றனர்.
ஆனால் பொதுமக்கள் பேருந்து ஏற பைகளுடன் வரும் நிலையில் அவா்கள் எங்கு நின்று பேருந்து ஏறுவது, பேருந்து எங்கு நிற்கும் என்று தெரியாமல் மிகவும் அவஸ்தையுடன் அலையும் நிலை உள்ளது. அதுவும் முதல்வரின் தொகுதியில் இந்த நிலையா என்பதை நினைக்கும் போது மிகவும் வேதைனையளிக்கின்றது. திருச்சி மாநகர போக்குவரத்து காவல் துறை இந்த அவல நிலையை போக்க நடவடிக்கை எருக்குமா?
— தஞ்சை க.நடராசன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.