இந்திய ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் டீசல் பங்க் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிமிடெட் ) திருச்சி மண்டலம் குன்னம் கிளையில் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்க கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் இரா பொன்முடி , இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதன்மை மேலாளர் சிவசங்கரன் ஆகியோர் 13/06/20025 அடிக்கல் நாட்டினார்கள்.
தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலம் குன்னம் கிளையில் ரூபாய். ஒரு லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தையும் திறந்து வைத்தார்கள். மேலும் ரூபாய் 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் பேருந்து பராமரிப்பு பணி பார்க்க புதிதாக அமைக்கப்பட்ட கிரீஸ் பிட் திறந்து வைத்தார்கள். குன்னம் கிளை வளாகத்தில் மரக்கன்று நடும்பணிகளையும் தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக கும்பகோண கோட்ட பொது மேலாளர் சிங்காரவேலன்,( தொழில்நுட்பம்) திருச்சி மண்டல பொது மேலாளர் சதீஷ்குமார், முதன்மை நிதி அலுவலர் சந்தானகிருஷ்ணன், துணை மேலாளர்கள் ரவி, புகழேந்தி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளர் பரத் ஸ்ரீ மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.