அப்துல் கலாம் முதல் மயில்சாமி அண்ணாதுரை வரை கற்ற அறிவியல்…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அடிப்படை அறிவியல் என்பது கணிதம்,பௌதிகம், ரசாயனம், தாவரவியல் மற்றும் விலங்கியல் இதுதான் அறிவியலுக்கு அடிப்படை. இதுதான் அடிப்படை அறிவியல் என்கிறோம். இன்றைக்கு இதை இந்த சமுதாயத்தினர் பெற்றோர்கள் மாணவர்கள் மறந்து போய்விட்டார்கள். கொரோனாவுக்கு முன்பு உயர் கல்வி படிப்பில் மாணவர்கள் உயிரியல் உடன்குரிய கணிதமும் கணிப்பொறி அறிவியல் உடைய கணிதமும் முழுவதுமாக அறிவியல் கலந்த பாடத்தை தான் எடுத்து பயின்று வந்தார்கள்.

அப்துல் கலாம்
அப்துல் கலாம்

Kauvery Cancer Institute App

இன்றைக்கும் விஞ்ஞானிகள் என்று சொல்லக்கூடிய முன்னாள் ஜனாதிபதி மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள், இஸ்ரோ என்ற இயக்கத்தினுடைய தலைவர் சிவன், மயில்சாமி அண்ணாதுரை மற்றும் பல அறிவியலார் இப்படிப்பட்ட அடிப்படை அறிவியலை கொண்டு தான் முனைவர் பட்டம் சென்று சாதனையாளர்களாக மாறியிருக்கிறார்கள்.

மயில்சாமி அண்ணாதுரை
மயில்சாமி அண்ணாதுரை

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஆனால் இப்போது மாணவர்கள் மத்தியில் அடிப்படை அறிவுகளை குறித்ததான கணிதமோ, இயற்பியலோ, வேதியலோ தாவரவியலோ, விலங்கியலோ குறித்த ஆர்வமில்லை. கொரோனாவுக்கு பின்பதாக மாணவர்கள் படிப்பை குறித்து படிப்பதை விரும்பவில்லை எனவே தான் இன்றைய காலகட்டத்தில் கலை அறிவியல் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்பியல், வேதியல் பாடங்களில் அட்மிஷன் குறைவாக இருப்பது.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

இக்குறைவு நிமித்தம்   பேராசிரியர் பேராசிரியை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகிறது. எனவே பள்ளி கல்வித்துறையும் உயர் கல்வித்துறையும் நல்லதொரு முடிவை எடுக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம்.

அறிவியல்இன்றைக்கு எத்தனையோ தகவல் தொழில்நுட்பங்கள் இருந்தாலும் அன்றைக்கு நாம் தகப்பனம் தாயும் நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா மலை மேல் ஏறி வா மல்லிகைப்பூ கொண்டு வா என்று சொன்ன அந்த வாக்கின்படி இன்றைக்கு  விஞ்ஞானியாக இருக்கலாம் வேதியல் துறையில் விஞ்ஞானியாக யாராக இருந்தாலும் அவர்கள் எல்லாரும் அடிப்படை அறிவியலைக் கொண்டுதான் வந்தார்கள். எனவே பள்ளி கல்வித்துறையும், உயர் கல்வித்துறையும் நல்லதொரு தீர்மானம் எடுத்து வரும் காலங்களில் அடிப்படை அறிவியல் வேதியல், தாவரவியல் கல்வியாளர் என்கிற ஒரு ஆதங்கத்தோடு கூட இந்த பதிவை பதிவு செய்கிறேன்.

ஆரம்பக் கல்வி, நடுநிலைக் கல்வி, இடைநிலை கல்வி, உயர்கல்வி, மேல்நிலைக் கல்வி இந்த ஐந்து கல்விகளிலும் பள்ளி கல்வித்துறை அறிவியலை செயல்முறை அறிவியலாக செய்து காட்டி மாணவர்களுக்கு அறிவியல் கூறிய நாட்டத்தை உருவாக்க வேண்டும். அதுதான் அடிப்படை இந்த அடிப்படையை பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களும் மூவரும் சேர்ந்து ஒரு ஒளிமயமான நல்லதொரு தலைமுறையை உருவாக்குவோம்.

 

 பேராசிரியர் அருள் சா, இயக்குனர்

பிரைட் மார்னிங் ஸ்டார் கல்வி மையம், திருச்சி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.