வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டு வகையாய் சிக்கிக் கொண்ட சீமான் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டு வகையாய் சிக்கிக் கொண்ட சீமான்

ஏறுவதற்கு ஒரு மேடையும் பேசுவதற்கு ஒரு மைக்கும் கையில் கிடைத்துவிட்டால், கண்டதையும் பேசி சர்ச்சையில் சிக்குவது சீமானின் வாடிக்கையாகவே மாறிவிட்டது. அத்தகைய அவதூறு பேச்சுகளுக்காக, மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று சவால் விடுவதும் அதையே தனது கெத்தாகவும் காட்டி வருகிறார், சீமான்.

Kauvery Cancer Institute App

இவ்வாறு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், அப்போதைய திருச்சி மாவட்டத்தின் எஸ்.பி.யாக இருந்தவரும் தற்போது திருச்சி சரக டிஐஜியாக இருப்பவருமான வீ.வருண்குமார் ஐ.பி.எஸ்.க்கு எதிராக, அண்ணன் சீமான் பேசியிருந்த அவதூறு பேச்சுக்காக வகையாய் வழக்கில் சிக்கியிருக்கிறார், சீமான்.

கடந்த 11.07.2024 அன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், அப்போது திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக பதவியில் இருந்த வீ.வருண்குமார் ஐ.பி.எஸ்.க்கு எதிராக சாதிய ரீதியிலான கருத்துக்களை தெரிவித்திருந்தார் சீமான்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சாதிய பாகுபாடு பார்க்கிறார் என்றும் குறிப்பிட்ட சாதியினருக்கு எதிராக, தனது போலீசு அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கிறார் என்பதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த அவதூறு பேச்சுக்கு எதிராக, வீ.வருண்குமார் ஐ.பி.எஸ். திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில்தான், சீமான் அவதூறாக பேசியதற்காக வழக்கை எதிர்கொள்ள வேண்டுமென்று அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது, திருச்சி குற்றவியல் நீதிமன்றம்.

நீதிமன்றத்தில் வருண் ஐபிஎஸ்
நீதிமன்றத்தில் வருண் ஐபிஎஸ்

இந்த வழக்கு விவகாரம் குறித்து, வீ.வருண்குமார் ஐ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர் என்.முரளிகிருஷ்ணனிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “கடந்த 11.07.2024 அன்று சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் சீமான் பேசியிருந்த சர்ச்சையான கருத்துக்களுக்கு விளக்கம் கேட்டும்; அவதூறு பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்றும் கோரி வழக்கறிஞர் நோட்டீசு ஒன்றை 30.07.2024 அன்று அனுப்பியிருந்தோம். அந்த அறிவிப்புக்கு முதலில் 06.08.24 தேதியிட்டு சீமான் தரப்பு விளக்கத்தை வழக்கறிஞர் செ.சேவியர் பெலிக்ஸ் என்பவர் வழியாக அளித்திருந்தார்கள். அதில், அந்த குறிப்பான அவதூறு குறித்த எந்த விளக்கத்தையும் அவர்கள் தரப்பில் அளிக்கவில்லை.

பின்னர், 06.08.24 தேதியிட்டு அனுப்பி வைக்கப்பட்ட வழக்கறிஞர் பதில் அறிவிப்பு, சீமானின் கவனத்திற்கு வராமலேயே அனுப்பி வைக்கப்பட்டதாகவும்; அந்த பதில் சீமானுக்கு ஏற்புடையது இல்லை என்றும் தெரிவித்து மீண்டும் 22.08.2024 தேதியிட்டு எஸ்.சங்கர் என்ற வழக்கறிஞர் வழியாக இன்னொரு பதிலை அளித்திருந்தார்கள். அந்த இரண்டாவது வழக்கறிஞர் கடிதத்திலும் எங்களது குறிப்பான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவில்லை.

திருச்சி நீதிமன்றத்தில் சீமான்
திருச்சி நீதிமன்றத்தில் சீமான்

வேறு வழியின்றி, எனது கட்சிக்காரர் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அக்டோபர்-2024 இல் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தோம். 27.12.2024 அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 30.12.2024 அன்று முதல் வாய்தா போடப்பட்டது. அன்றைய தேதியில் எனது கட்சிக்காரர் வீ.வருண்குமார் ஐ.பி.எஸ். நேரில் ஆஜராகியிருந்தார். இதனை தொடர்ந்து, 02.01.2025 அன்று எங்கள் தரப்பு சாட்சிகளை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தினோம்.

இந்த வழக்கில் சீமான் தரப்பில் பதில் அளிக்க அவகாசம் வழங்கியும், 21.01.2025 தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் குறிப்பிட்டு நீதிமன்றத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணையை சீமான் ஏற்க மறுத்து திருப்பியனுப்பி விட்டார். அடுத்து, 19.02.2025 இல் அவர் ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை. மூன்றாம் வாய்ப்பாக, 07.04.2024 அன்று ஆஜராக உத்தரவிட்டது. அப்போதும், அவர் ஆஜராகாத நிலையில்தான், நாளையே ஆஜராக வேண்டும் என்று கடுமை காட்டியிருந்தார் நீதிபதி. இதன்பிறகே, 08.4.2025 அன்று நேரில் ஆஜராகியிருந்தார் சீமான்.

இதனையடுத்து, 08.05.2025 அன்று தேதியிட்டு, அன்றைய நாளில் சீமான் தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு நீதிமன்றம் கோரியிருந்தது. ஆனால், அன்றைய தேதியில் சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்தை எடுத்து வைக்க தயாராக இல்லை என்று வாய்தா கேட்டார்கள். 15.05.2025 அன்றைய தேதியில் இரு தரப்பினரும் வாதங்களை முன்வைக்குமாறு குறிப்பிட்டு வழக்கை ஒத்தி வைத்தது. ஆனாலும், அன்றும் அவர்கள் வாதத்துக்கு தயாராக இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இதனால் அதிருப்தியுற்ற நீதிபதி, எங்கள் தரப்பு வாதத்தை மட்டும் அன்றைய தேதியில் பதிவு செய்து கொண்டார்.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

இந்நிலையில்தான், 21.05.2025 அன்று தேதியிட்டு, சீமான் தரப்பு வாதத்தை முன்வைக்க கடைசி வாய்ப்பு என்பதாக குறிப்பிட்டிருந்தது. அன்றைய தேதியில், அவர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்திருந்தார்கள். இதனையடுத்தே, 04.06.2025 தேதியிட்டு வெளியான உத்தரவில், இந்த வழக்கில் சீமான் தரப்பில் குற்றமிழைத்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக உறுதி செய்த நீதிமன்றம் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதித்து உத்தரவிட்டிருக்கிறது.

எஸ்.பி வருண் - சீமான்
எஸ்.பி வருண் – சீமான்

போதிய முகாந்திரம் இல்லாமல் தொடரப்படும் அவதூறு வழக்குகளால் நீதிமன்றங்களின் நேரம் வீணடிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டே, ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பாகவே, நீதிமன்றம் முதற்கட்ட விசாரணையை நடத்தி அதில் முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் மட்டுமே குற்ற வழக்காக பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இந்த விவகாரத்தில் முகாந்திரம் இருப்பதை உறுதி செய்து தனியார் வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை குற்ற வழக்காக மாற்றி நீதிமன்ற விசாரணையை தொடர அனுமதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதன்படி, CRLMP no 33131/2024 என்று இருந்த வழக்கு தற்போது குற்ற வழக்காக (CC/724/2025 Varunkumar, Vs Seeman, Listed on 07-07-2025, Court: Judicial Magistrate No IV) மாறியிருக்கிறது.” என்கிறார், அவர்.

கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரானபோதுகூட, “இதெல்லாம் சகஜமப்பா. இதுபோல ஆயிரம் கேசு போட்டாலும் சமாளிப்பேன்.” என்ற ரீதியில் தமாசாக பேசியிருந்தார், சீமான்.

ஆனால், குறிப்பான இந்த வழக்கு விவகாரத்தை எடுத்துக் கொண்டால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக முதலில் மன்னிப்பு கேட்கும் தோரணையில் ஒரு வக்கீல் நோட்டீசை அனுப்பி வைத்துவிட்டு; அது ஊடகங்களில் வெளியாகி அவமானத்தை தேடி தந்த நிலையில், என்னைக் கேட்காமலேயே நோட்டீசை அனுப்பி விட்டார் என்று கட்சி தொடங்கிய காலத்துக்கு முன்பிருந்தே குடும்ப ரீதியில் தன்னோடு பயணித்து வந்தவரும் நாம்தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையின் மாநில தலைவர் பொறுப்பிலும் இருந்த செ.சேவியர் பெலிக்ஸ் என்ற வழக்கறிஞரை கைகழுவினார்.

வழக்கறிஞர் என்.முரளி கிருஷ்ணன்
வழக்கறிஞர் என்.முரளி கிருஷ்ணன்

எத்தனை கேசு வேண்டுமானாலும் போடு என்று பேசியவர், போட்ட கேசுக்கு ஆஜராகாமல், குறைந்தபட்சம் அழைப்பாணையைக்கூட கையில் வாங்காமல் திருப்பியனுப்பியிருக்கிறார். இதற்குமேலும் ஆஜர் ஆகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்த பிறகு, அதுவும் 24 மணிநேரம் கெடு விதித்த நிலையில் வேறுவழியின்றி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைப்பதிலும் மூன்று வாய்தாக்களை வாங்கிவிட்டு, இதுதான் கடைசி வாய்ப்பு என்று நீதிமன்றம் கடுமை காட்டிய பிறகு, நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்திருக்கிறார், சீமான்.

சீமானின் மேடைப்பேச்சு ஒன்றாகவும் நடைமுறை அதற்கு எதிர்மாறாகவும்தான் இருந்து வருகிறது என்பதைத்தான், இந்த விவகாரங்கள் எடுத்துரைக்கின்றன.

“பில்டிங் ஸ்ட்ராங்க் பேஸ்மட்டம் வீக்” என்ற வடிவேலுவின் டயலாக் தான் நியாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.

ஆதிரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.