எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் செய்த இளைஞர்கள் !
சிவகாசியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்த நாளை ஒட்டி 1500 இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினார்கள்.
சிவகாசி தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி 71 வது பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு கட்சியினர் மற்றும் தன்னார்வ இளைஞர்கள் 1500 பேர் ரத்ததானம் வழங்கினார்கள்.
பின்னர் அவர்களுக்கு நற்சான்றிதழ் பழங்கள் சத்தான உணவுகள் அடங்கிய பெட்டகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பின்னர் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை பயனுள்ளதாக கொண்டாடி வருகிறோம்,
தானத்திலேயே சிறந்த தானம் ரத்த தானம் அதை நாம் வழங்குகிறோம், இங்கு வழங்கும் ரத்தமானது பட்டாசு விபத்து மற்றும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும்என அனைவருக்கும் பயனுள்ளதாக விளங்குகிறது. நாம் ஒரு நபர் கொடுக்கும் இரத்தமானது மூன்று நபர்களின் உயிரை காப்பாற்றி வருகிறது மேலும் இரத்ததானம் வழங்குவதால் நம் உடல் மேலும் ஆரோக்கியம் அடையும் என தெரிவித்தார்.
— மாரீஸ்வரன்.