இதுவரை சபாநாயகர்களில் செல்லப் பாண்டியன், புலவர் கோவிந்தன், பழனிவேல் ராஜன் போன்றவர்களுக்குப் பிறகு சேடபட்டி முத்தையா, காளிமுத்து, ஜெயகுமார், தனபால், அப்பாவு போன்றவர் கள் சபாநாயகர்களாக இருந்திருக்கிறார்கள். இதில் சேடபட்டி முத்தையா ரொம்ப ரொம்ப மோசம். சபாநாயகர் ஆனவுடன் ஜெயலலிதா காலிலேயே விழுந்துவிட்டார். மற்றவர்கள் காலில் விழவில்லையே தவிர, எழுந்திரிக்கவே இல்லை.

தற்போதுள்ள சபாநாயகர் பரவாயில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட போதிலும் சுவாரசியமான சபாநாயகராக இருக்கிறார். அவருடைய செயல்பாடு எனக்குப் பிடித்திருக்கிறது. அமைச்சர்களைக் கண்டிக்கிறார். அவர்களுடைய அத்துமீறிய பேச்சுக்களை சபைக் குறிப்பிலிருந்து நீக்குகிறார். கொஞ்சம் வித்தியாசமானவராகத் தெரிகிறார்.

நேரலை என்பதால் அவர் நீக்குகின்ற விசயம் முன்பே மக்களுக்கு சென்றடைந்து விடுகிறது. அதேநேரத்தில் எதிர்காலத்தில் சட்டசபை குறிப்புகளில் அவர் நீக்கியவை இடம்பெறாது அதுவொன்றுதான் ஆறுதல். எனக்கென்னமோ நீண்டகாலம் அப்பதவியில் அவர் நீடிப்பார் என்ற நம்பிக்கை இல்லை.
மதுரைபாலன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.