அரியர்ஸ் எழுத ” இதுவே கடைசி வாய்ப்பு” அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…….
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என்ஜினீயாிங் கல்லூரி மாணவா்கள் , அனுமதிக்கப்பட்ட படிப்புக்கான உச்ச காலத்தைக் கடந்து, பாடங்களை நிலுவைகளில் (அரியர்ஸ்) வைத்திருக்கும் மாணவா்கள் பயன் பெறும் வகையில் ஏப்ரல்/மே 2025 பருவத்தோ்வு, ஜீன்/ஜீலை 2025-ல் தனி சிறப்புத் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவதாக அறிவித்திருக்கிறாா்கள்.
தோ்வுகள் சென்னை, விழுப்புரம், ஆரணி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் ஆகிய மையங்களில் மாணவா்களின் பதிவு எண்ணிக்கையின்படி நடத்தப்படுவதாகவும் தொிவித்திருக்கிறாா்கள். தோ்வுக்கு சிறப்பு கட்டணமாக ரூ.5000/- செலுத்தி (https://coe1.annauniv.edu) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தோ்வுக்கான இணையவழி பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கியது. தேர்வு எழுதவுள்ள மாணவா்கள் வரும் 17-ம் தேதி மாலை 4 மணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் தொடா்பான விவரங்கள் வரும் 27-ம் தேதிக்கு பிறகு பல்கலைக்கழக இணையதளத்தில் https://aucoe.annauniv.edu தெரிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளாா்கள்.